search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "செந்துறை அரசு மருத்துவமனை"

    • 24 மணி நேரமும் இயங்கும் அரசு பொது மருத்துவமனையில் நர்ஸ் மட்டுமே பணியில் இருந்த போது வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    • நர்ஸ் கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர்.

    செந்துறை:

    அரியலூர் மாவட்டம் செந்துறை அரசு பொது மருத்துவமனையில் நர்சாக பணிபுரிந்து வருபவர் ராதா (பெயர் மாற்றப்பட்டுள்ளது, வயது 35). ஆண்டிமடம் பகுதியைச் சேர்ந்த இவர் இரவு பணியில் இருந்தபோது செந்துறை ரெயில்வே ஸ்டேஷன் பகுதி சேர்ந்த விஜயபாரதி என்பவர் அங்கு வந்தார்.

    பணியில் இருந்தவர்கள் கேட்டபோது, தனது அண்ணன் மருத்துவமனையில் உள் நோயாளியாக தங்கி சிகிச்சை பெற்று வருவதாகவும், அவரை பார்க்க வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது பணியில் இருந்த நர்சு ராதா, ஏற்கனவே அவரை சிகிச்சை முடிந்து வீட்டுக்கு அனுப்பி வைத்துவிட்டதாக கூறியுள்ளார்.

    இந்த நிலையில் மீண்டும் நள்ளிரவு மருத்துவமனைக்கு வந்த விஜயபாரதி மருத்துவமனையின் வாயில் கதவை மூடினார். இதைப்பார்த்த ராதா அவரை தடுத்து தட்டிக்கேட்டுள்ளார். உடனே ராதாவின் கையை பிடித்து இழுத்து அவரை பலாத்காரம் செய்ய முயற்சி செய்துள்ளார். மேலும் அவருக்கு பாலியல் தொல்லையும் அளித்துள்ளார்.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கதவை திறந்து விட்டு கூச்சல் போட்டுள்ளார். உடனடியாக அங்கு பணியில் இருந்த உதவியாளர்கள் வந்து ராதாவை காப்பாற்றி மீட்டு உள்ளனர். இதுகுறித்து ராதா கொடுத்த புகாரின் பேரில் செந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயபாரதியை கைது செய்தனர்.

    பின்னர் செந்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை சிறையில் அடைத்தனர். 24 மணி நேரமும் இயங்கும் அரசு பொது மருத்துவமனையில் நர்ஸ் மட்டுமே பணியில் இருந்த போது வாலிபர் ஒருவர் மருத்துவமனைக்குள் வந்து அவரை பலாத்காரம் செய்ய முயன்ற சம்பவம் செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    ×